தனிநபர் அனுபவம், வாழ்க்கை தரிசனம், அறநெறிகள், பொது நீதிகள், சமூக விதிகள். இவையல்லாமல் தனிமனித உளவியல், சமூக உளவியல், ராசி, நட்சத்திரம், சாதி தொடர்பான சொலவடைகளும் ஏராளம். வசைகள் சொலவடைகளில் இயல்பாக புழங்குகின்றன. சொலவடைகளின் புனைவு அம்சம் கச்சிதமாகவும் உலகப்பொதுவாகவும் இருப்பது பிரமிப்பைத் தருகிறது எனினும் இனவாதம், பெண் வெறுப்பு, அடித்தள மக்கள், பெண்கள், சில குறிப்பிட்ட சாதியினர் பெரும்பாலான சொலவடைகளில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுதல் ஆகியன பொதுப்பண்புகளாய்ப் பயின்று வருகின்றன. நிலவுடமைக்கால மதிப்பீடுகளே சொலவடைகளில் ஓங்கி நிற்கின்றன என்பதை கிராமப் பண்பாட்டின் ஓர் அங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சொலவடைகள் தோன்றிய காலத்தின் கருத்துருக்கள் அவற்றில் மேலோங்கி நிற்பது இயல்பே.

https://www.kurugu.in/2023/07/sambavangal-sj-sivashankar.html 

 

Loading
Back To Top