
யக்ஷகானா என்றால் என்னவென்று அறிவதற்கு ஒருவர் அதன் கலைப் பெறுமானத்தை உணர்ந்தாலே போதும். ஆனால் யக்ஷகானாவின் பல வகைத்தன்மையை எல்லா குழுக்களும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லா நாடகங்களும் அத்தகைய கடுமையான தரநிர்ணயங்களைப் பேணவும் முடியாது. இன்று இந்த நாடக வடிவத்தின் மரபார்ந்த அழகியல் கூறுகள் யாவும் நிறப் பிரக்ஞையோ ஒத்திசைவு சார்ந்த புரிதலோ அற்ற “புதிய விநோதப் பிரியர்களால்” கைவிடப்பட்டுவிட்டன. இருப்பினும் சில அரிய குழுக்கள் இன்றளவும் மரபார்ந்த வடிவத்தின் சிறப்புகளைக் கைக்கொண்டுள்ளன.
https://www.kurugu.in/2024/01/yakshagana-shivaram-karanth.html