
திணை – நெய்தல்
பாடியவர் – வெண்பூதி
யானே ஈண்டை யேனே; என்நலனே
ஆனா நோயொடு கான லஃதே;
துறைவன் தம்ஊ ரானே;
மறைஅலர் ஆகி மன்றத் தஃதே.
தெளிவுரை – நான் இங்கு உள்ளேன். என் அழகு நலன் தீராத நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது. தலைவனாகிய துறைவன் தன் ஊரில் உள்ளான். எங்களது மறைவான களவொழுக்கம் அலராக இவ்வூர்ப் பொதுமன்றத்தில் உள்ளது.