திணை – நெய்தல்

பாடியவர் – வெண்பூதி

 

யானே ஈண்டை யேனே; என்நலனே

ஆனா நோயொடு கான லஃதே;

துறைவன் தம்ஊ ரானே;

மறைஅலர் ஆகி மன்றத் தஃதே.

 

தெளிவுரை – நான் இங்கு உள்ளேன். என் அழகு நலன் தீராத நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது. தலைவனாகிய துறைவன் தன் ஊரில் உள்ளான். எங்களது மறைவான களவொழுக்கம் அலராக இவ்வூர்ப் பொதுமன்றத்தில் உள்ளது.

Loading
Back To Top