01

நீங்கள் நம்பாத போதும்

நீராலானது என் பாதை

தீயாலானது என் பயணம்

ஒவ்வொன்றும்

இவ்வாறே

துடித்து வியக்கும்

திகைத்து நிலைக்கும்

அடிவானத்துக் காலடிகள்

எனது.

02

இந்தப் பெருவெளியில்

என் கவிதையை மொய்த்திருக்கும்

எறும்புகளின் தொகை

எண்ணமுடியாதது

ஒரு தெய்வீகப் பவனியில்

கரைந்த துயரைப் போல

தடங்களின் மீது

கவிதை இனித்து நீண்டிருக்கிறது

எறும்பின் கால்களுக்கு கீழே

இனிமை ஊறி நிற்கிறது.

03

என்றும் அப்படித்தான் நடக்கிறது

இன்றும் அப்படி நடந்திருக்கலாம்

உன் ஊற்றின் மகரந்தத்தில்

பாவி நின்ற ஷணம்

சூறை ஏன் வந்தது?

 

Loading
Back To Top