அறை எங்கும் பரவிக்கொண்டு இருந்த சின்னச் சின்ன ஓசைகள் அடங்கி, கண் இமைக்கும் நேரத் துக்கும் குறைவான நொடியின் இடைவெளியில் மௌனம் வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் அண்ணாச்சியைத் திரும்பிப் பார்க்க, ஏதும் பேசாமல் என்னைத் தோள் தொட்டு ஆதரவாக முன்னே நகர்த்தினார் அண்ணாச்சி. கூட்டம் தன்னிச்சையாக விலகி, உருவாக்கிய வழிக்கு நேர் எதிரில், அத்தை நிமிர்ந்து என்னைப் பார்த்தது. இரண்டு கைகளையும் கழுத்து வரை உயர்த்தி, கைகளைச் சேர்க்காமல் வணங்கினேன். எல்லா வற்றையும் உணர்ந்துகொண்டதான பாவனையில், மெள்ளத் தலையசைத்துத் தன்னருகே வருமாறு கூப்பிட்டது அத்தை. அத்தையை நோக்கி நகர்ந்து, பைக்குள் இருந்த புடவையை எடுத்த கணத்தில், ஏதோ ஒரு கை பையை என்னிடம் இருந்து ஆதர வாக வாங்கிக்கொண்டது.