
வீழ்ந்த கனவே!
சுவடுகளில் மூச்செறிந்து
நிலம் கிளர்த்தி
திசை விரைந்து தேடும்
உனக்கும் எனக்குமிடையே
ஒரு கடல் புகுந்துவிட்டது.
நிலம் பிளந்துவிட்டது.
****
பூமியின் மேனியில்
சருகின் பழுப்பு
உதிர்ந்ததும்
உதிருமா
இலையின்
வண்ணம்.
****
அந்தரத்தில் பாவி
தேன் குடிக்க எண்ணும்
வண்ணத்துப்பூச்சிக்கு
மகரந்தத்தை
ஈயாத
குற்ற மலர்
இப்பெருவெளியில்
காணேன்.
****