வீழ்ந்த கனவே!

சுவடுகளில் மூச்செறிந்து

நிலம் கிளர்த்தி

திசை விரைந்து தேடும்

உனக்கும் எனக்குமிடையே

ஒரு கடல் புகுந்துவிட்டது.

நிலம் பிளந்துவிட்டது.

****

பூமியின் மேனியில்

சருகின் பழுப்பு

உதிர்ந்ததும்

உதிருமா

இலையின்

வண்ணம்.

****

அந்தரத்தில் பாவி

தேன் குடிக்க எண்ணும்

வண்ணத்துப்பூச்சிக்கு

மகரந்தத்தை

ஈயாத

குற்ற மலர்

இப்பெருவெளியில்

காணேன்.

****

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top