
01
நிலவு மங்கிய
நள்ளிரவில்
மலர்ச்செடியொன்றை
பதியம் வைத்தேன்.
கண்ணீராலும்
குருதியாலும்
ஈரலிக்கும்
நிலத்தில்
மலரும்
பூ
மலரும்.
02
குழந்தை உறங்கும் தொட்டிலில்
அமர்ந்திருக்கிறது வண்ணத்துப்பூச்சி
மொக்கில் தேனருந்தும்
ஒரு சரித்திரத்தின் தொடக்கத்திற்காக
எப்போதும் காத்திருக்கிறது
காலம்.