உன் கதைக்கும் 

என் கதைக்கும் 

இடையில் 

ஓயாத கிளர்ச்சி 

அக்கினியும் மழையும் 

தெப்பத்தின் நிழல் மறைந்த 

நீரேரியின் தனிமை 

இவை போக 

உன் கதைக்கும் 

என் கதைக்கும் 

இடையில் 

சதா பொருக்குலர்ந்து 

ரத்தம் கசியும் 

வடு.

Loading
Back To Top