01

திசையறியாமல்

காற்றில் மோதும்

காலைப் பொழுதில்

பூக்கள்

உதிர்கின்றன

மகரந்தம் ஏந்தாத

வண்ணத்துப்பூச்சிகள்

பைத்தியமாய்

வெறும் கிளைகளில்

அமர்கின்றன.

இனியவை

எழுந்து பறக்கும்

வரை

உதிராது

கிளைகளில்

அசையும்

மலர்க்காடு.

 

 

 

Loading
Back To Top