கிளை

அசைக்கும்

பறவை

சிறகை

உதிர்க்க

காற்றின்

ரூபம்

மலர்கிறது.

***

கண்ணீர் ததும்பும்

பாடலோடு

நடைமேடை

அந்தகன்.

நகரத்தின் புழுக்கத்தில்

பசியோடு

ஒலிக்கின்றன

வாத்யங்கள்.

சில்லறைகள்

கணீரென,

ராகம் குழம்பியும்

தாளம் சிதறியும்

அவனது

கண்ணீர் ததும்பும்

பாடல்

முடியாது நீள்கிறது

நடைமேடையில்.

***

என்னுடைய ஜன்னல்

எப்போதும் திறந்திருக்கிறது.

இரவுகளில்

பகல்களில்

எப்போதும்

திறந்திருக்கும்

ஜன்னலில்

இப்போது தான்

வந்தமர்கிறது

மகரந்த

ஈரத்தோடு

வண்ணத்துப்பூச்சி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top