01

கனவுத் தறியில் இழையும்

இவ்விரவின் சடசடப்பில்

குளிர் கூடி

வான் திறக்கும்

மழை.

02

உறைந்த கோபுரங்களை

வெறித்து நிற்கும்

மாடப்புறாவின்

தனிமை.

03

நான் அரிந்த சூரியனை

பிழிந்து ஊற்றிய கணம்

சாறெனப் பொழிந்தது

அந்தி.

 

 

 

 

Loading
Back To Top