என் சொல்லில் நிரம்பும் உனது கருணை கசியும் குருதியில் பூக்கிறது.
Month: March 2026
நாத ஞாபகம்
நேற்றிரவு என்னையே வீணையாக்கி தந்திகளை அதிர்வித்தேன் அலைந்து திரியும் ஞாபகம் போல இரங்கலாய் பெருகியது நாதம் நின்று புகைந்தன விரல்கள். […]
மலர்கிற இரவு
இனியது இரவு மழைக்கு அப்பாலும் இருளுக்கு அப்பாலும் ஒளிக்கு அப்பாலும் மலர்கிற இரவு இனியது.
எங்குமாயும்
எங்குதான் மாய்கிறது இங்குதான் இங்குதான் மாயையைப் போல் எங்குமாயும் எங்குமிலாதும் வளியாகியது ஒளி.
இரவு
இத்தனை நிலவுகள் வந்த பின்னும்
போல
தெய்வம் மழைபோல இறங்கும் கனாவின் பாதியில் விழித்தேன் உடல் நனைந்த ஈரத்தில் அவ்வளவு நடுக்கம்.