01

துயிலெழுந்தது பூமி

ஆழி நிறைந்து சூழ்ந்தது

சூரியன்

பட்டுப்போனதொரு

அத்திமரத்தின் கிளையிருந்து

சிறகு விரிக்கும்

பறவை

பகலை எச்சமிடுகிறது.

02

இங்குதான்

தனிமையைச் சந்தித்தேன்

 

நீண்டிருக்கும் அலகில்

தானியத்தை

ஏந்திச் செல்லும்

ஒரு பறவையின்

தனிமை.

 

03

இரவின் மீது வழியும்

காமத்தின் மெழுகில்

என்னுடல்

திரி

உன்னுடல்

சுடர்.

 

Loading
Back To Top