01

நெஞ்சில் அரக்கிருள் ஓய்ந்த

கணந்தொறும்

உன் நினைவு கிழித்திறங்குகிறது

பாழின் சங்கீதம்

படைக் கலங்களுடன்

சிலிர்த்து இறங்குகிறது

எனதுயிரின் வாதை

வெட்ட வெட்டத்  தழைக்குமா?

போக்கிழந்து முணுமுணுக்கும்

சொல்லின் கருப்பைக்குள்

பற்றியெரியும்

என் பிரார்த்தனை

கிளர்ந்தெழுந்து

கனல் தீண்டி

வந்தமர்க!

Loading
Back To Top