01

ஒரு காகிதப்படகில்

என் நதியை இழுத்துச் செல்லும்

மழையை

தாழ்வாரத்தில்

அமர்ந்திருந்து பார்க்கிறது

போழ்து.

02

எனதொரு பாடலை

தாயமாடி

பாம்பின் வயிற்றில் இறைத்தேன்.

எத்தனை கட்டங்கள்

நகர்ந்து

ஏணிக்குப் போகவேண்டும்

வாலின் சொற்கள்.

03

மதுக்கூடத்தில்

Oh… Butterfly பாடுகிறாள்

மாதொருத்தி.

அவளது குரலில் உண்டாகிற

ஏதேன் தோட்டத்தில்

பாவம் தரிக்கும் ஆப்பிள்கள்

வேடிக்கை பார்க்கும் பாம்புகள்

எத்தனை தடவை மனிதன்

கடவுளிடம் தோற்றுப் போகவேண்டும்.

Oh… Butterfly…. Butterfly…..

Butterfly.

 

 

 

 

02

 

Loading
Back To Top