01

சிறகிலிருந்து பிரிந்த

இறகொன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் சென்றதாகப்

பாடினான்

பிரமிள்.

காற்றின் தீராத பக்கங்களில்

அவனையெழுதும்

கவிதை

மொழியிலிருந்து பிரிந்து

என்னிடம் வந்தது.

 

02

அநாதியிலும் – ஆதியிலுமிருந்து

அழைத்து வரப்பட்ட எனக்கு

என்ன பெயர் அறியேன்.

ஆனாலும் போதும்

மனிதன் நான்.

 

03

காகிதங்கள் படகுகளாகின்றன

தாழ்வாரங்கள் அருவிகளாகின்றன.

அருவியில் நனைந்து

காகிதப் படகின் பின்னோடி

நிலத்தில் கால் வைத்தால்

மழையோ

மழை.

 

 

 

Loading
Back To Top