01

மண்புழுக்கள் இல்லை

தூண்டில் முள்ளில் ஏற்றினேன்

என் தசையை

எத்தனை மீன்கள் இழுக்கும்

இரை

நான்.

02

எனது படகு

அலையைக் கிழிக்கும்

கடலை மிதிக்கும்

புயலில் மோதி

கரையைக் கடக்கும்.

03

அறிமுகமற்ற ஒருவர்

புன்னகைக்கிறார்.

இப்படி பதற்றம் தருவது

அறிமுகமற்றதா?

புன்னகையா?

அதே ஒருவரைப் பார்த்து

புன்னகைக்கிறேன்.

அப்போதும்

அறிமுகமற்றவர் போலவே

அவரிருக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top