பாதித்தூரம் ஏறுமுன்னே எனக்கு கால் நோவு மிகுதியாய் விட்டது. பிதாவிடம் சொன்னால் முன்பு வண்டி வேண்டாமென்று சொன்ன காரணத்தை கொண்டு அவர் மிகவும் கோபம் கொள்ளுவார். கிட்டண்ணாஎன்னிடம் அடிக்கடி: – ” கால் வலிக்கிறதா ? இரையாதே பல்லை கடித்துக்கொண்டிரு . இல்லாவிட்டால் அண்ணா வைவார். கதைகள் சொல்றேன் கேள் ” என்று பல விதங்களிலே சமாதானம் பண்ணுவார் . ஒரு மட்டிலும் ஏறி உச்சிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஒரு சின்ன மைதானம்.